பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா


பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா
x

பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா

திருவாரூர்

திருவாரூர் தட்சணாமூர்த்தி நகரில் பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்காவை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

சிறுவர் பூங்கா

திருவாரூரில் தஞ்சை- நாகை சாலையில் மேம்பாலம் அருகே தட்சணா மூர்த்தி நகர் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். . இந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் பொழுதுபோக்கிற்காக ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவிற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து செல்வது வழக்கம். அங்குள்ள உபகரணங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்வார்கள். மேலும் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வது, குழந்தைகள் விளையாடுவதை கண்டு ரசிப்பது என பொழுதை கழிப்பார்கள். தற்போது இந்த பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் பூங்காவில் ஊஞ்சல், சறுக்கு, ஏணி உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து கிடக்கிறது. சில விளையாட்டு பொருட்கள் இல்லாமல் காணப்படுகிறது.

சிறுவர்கள் தவிப்பு

பூங்காவில் செடிகள் ஆங்காங்கே வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் இந்த பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் பாதையும், மின்விளக்குகளும் சேதமடைந்து உள்ளது. இதனால் பூங்காவில் விளையாடி பொழுதை கழிக்க முடியாமல் சிறுவர்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தட்சணாமூர்த்தி நகாில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் நடைபயிற்சி செய்வோர் வசதிக்காக பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது பூங்கா பராமரிப்பின்றி காணப்படுவதால் சிறு மழை பெய்தாலும் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

சீரமைக்க வேண்டும்

எனவே சிறுவர் பூங்காவில் மண்டி கிடக்கும் புதர்களை வெட்டி அகற்ற வேண்டும். மேலும் அங்குள்ள விளையாட்டு உபகரணங்களை சரி செய்து முறையாக பராமரிக்க வேண்டும். அப்போது தான் சிறுவர்கள் அங்கு சென்று விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story