பரமக்குடி அருகே வீடு கட்டும் தகராறில் முதியவர் அடித்துக்கொலை


பரமக்குடி அருகே வீடு கட்டும் தகராறில் முதியவர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 22 April 2023 6:45 PM GMT (Updated: 22 April 2023 6:46 PM GMT)

பரமக்குடி அருகே வீடு கட்டும் தகராறில் முதியவர் அடித்துக்கொலை

ராமநாதபுரம்

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தினைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு கண்ணன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார். இந்தநிலையில் அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் உதயகுமார்(வயது60) என்பவர், பிரபு கண்ணனிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் உதயகுமார், அவரது தம்பி மகேந்திரன்(48), உதயகுமாரின் மகன் சரத்குமார்(25) ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரபு கண்ணனை கல்லால் தாக்கினர். இதை பார்த்த பிரபு கண்ணனின் தந்தை மணி(62), ஏன் என் மகனிடம் தகராறு செய்கிறீர்கள் என தட்டிக் கேட்டுள்ளார். உடனே அவரையும் அடித்து உதைத்துள்ளனர். இதில் மணி கீழே விழுந்தார். அப்போது தலையில் கல் குத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பரமக்குடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாணிக்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரபு கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் உதயகுமார், மகேந்திரன், சரத்குமார் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் பாண்டி ஆகிய4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பரமக்குடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் கைது செய்தார். மேலும் பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story