கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடியுடன் ஊர்வலம் செல்ல முயற்சி


கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடியுடன் ஊர்வலம் செல்ல முயற்சி
x
தினத்தந்தி 1 April 2023 6:45 PM GMT (Updated: 1 April 2023 6:46 PM GMT)

ராஜபாளையத்தில், கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடியுடன் ஊர்வலமாக செல்ல முயன்று மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 76 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையத்தில், கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடியுடன் ஊர்வலமாக செல்ல முயன்று மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 76 பேர் கைது செய்யப்பட்டனர்.

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி பொன்விழா நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ேநற்று கலந்துகொண்டார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஜபாளையம் காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டது, காரல் மார்க்சை இழிவுபடுத்தி பேசியதற்காக கவர்னரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். மேலும் கவர்னரை கண்டித்தும், கவர்னர் திரும்பிச்செல்ல வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.

76 பேர் கைது

ேமலும் கருப்புக்கொடி காட்டியபடி சாலையில் ஊர்வலமாக செல்ல முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் காந்தி சிலை அருகே பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற 7 பெண்கள் உள்பட 76 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஒரு மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story