மயிலாடுதுறை மாவட்டத்துக்கு குறைந்த நிவாரணத் தொகை ஒதுக்கீடு


மயிலாடுதுறை மாவட்டத்துக்கு குறைந்த நிவாரணத் தொகை ஒதுக்கீடு
x

அமைச்சர் இல்லாத மாவட்டமாக இருப்பதால் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு குறைந்த நிவாரணத் தொகை ஒதுக்கீடு என அய்யாக்கண்ணு பேட்டி.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை அருகே உள்ள பல்லவராயன்பேட்டை, ஆனந்தகுடி, அருண்மொழித்தேவன் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மயிலாடுதுறை மாவட்டத்தை மழையால் பாதித்த மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். அமைச்சர்கள் உள்ள மாவட்டங்களில் ரூ.50 கோடி, ரூ.60 கோடி என காப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் இல்லாத மாவட்டமாக உள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு குறைந்த நிவாரணத் தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம். அதற்கும் உடன்படவில்லை என்றால் சென்னையை முற்றுகையிடுவோம். முறையாக கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணமாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story