அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்ப்பது ஒற்றை தலைமை தான் - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி


அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்ப்பது ஒற்றை தலைமை தான் - ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
x

ஒற்றை தலைமைக்கான விடையை கட்சி தான் அறிவிக்கும் என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. வரும் 23ம் தேதி கூடவுள்ள பொதுக்குழு, செயற்குழு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்தநிலையில், அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. ஒற்றை தலைமை அவசியம் என்பதை வலியுறுத்தி கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் பேசினார்கள். அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை தான் தேவை என பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

அதிமுக தொண்டர்களும் சரி, நிர்வாகிகளும் சரி இப்போது எதிர்பார்ப்பது ஒற்றை தலைமை தான். ஒற்றை தலைமை யார் என்பதை கட்சி தான் முடிவு செய்யும். ஒற்றை தலைமைக்கான விடையை கட்சி தான் அறிவிக்கும். இன்று நடைபெற்றது கருத்து பரிமாற்றம் தான். கட்சிக்கு தொடர்பில்லாத சசிகலா குறித்து விவாதித்து ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும். அதிமுகவுக்கு அழிவு என்பது கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story