2024 மக்களவைத் தேர்தல் பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது- எடப்பாடி பழனிசாமி


2024 மக்களவைத் தேர்தல் பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது- எடப்பாடி பழனிசாமி
x

2024 மக்களவைத் தேர்தல் பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று தரிசிக்க வந்த எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கோவை சரக டிஐஜி விஜயகுமார் நேர்மையான அதிகாரி. அவருக்கு ஆறு மாதங்களாகவே மன அழுத்தம் இருந்ததாகக் கூறப்படுகிறது. சிகிச்சை பெற்ற டிஐஜிக்கு பணி வழங்கியதால் அவர் தற்கொலை செய்துள்ளார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்த விஜயகுமாரை பணியில் தொடர அனுமதித்தது ஏன்?

2024 மக்களவைத் தேர்தல் பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது. பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அமைச்சர் ரகுபதி ஊழல் குறித்துப் பேசுகிறார். அவர் மீதும் வழக்குகள் உள்ளன. அவருக்கு ஊழல் குறித்துப் பேச தகுதியே இல்லை. கவர்னருக்கு ஊழல் குறித்து கடிதம் எழுதவும் ரகுபதிக்கு எந்த தகுதியும் இல்லை" என்றார்


Next Story