வேளாண்மை-உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை


வேளாண்மை-உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை
x

வேளாண்மை-உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை நடந்தது.

கரூர்

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டத்தில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசுகையில், வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் உணவு தானிய உற்பத்தி குறித்தும், விதை மற்றும் உரங்கள் இருப்பு குறித்தும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் குறித்தும், பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் குறித்தும், பிரதமரின் விவசாயி கவுரவ நிதி குறித்தும், மாநில வேளாண் அபிவிருத்தி திட்டம் குறித்தும், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம்- தரிசு நிலங்களை விலைநிலங்களாக மாற்றும் திட்டம் குறித்தும், தோட்டக்கலைத்துறை சார்பில் பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டம் குறித்தும், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் குறித்தும், மானாவாரி வேளாண் வளா்ச்சி திட்டம்-ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்தும், ராபி பருவத்திற்கான பயிர் காப்பீடு குறித்தும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித்திட்டம் குறித்தும், மாநில தோட்டக்கலை பண்ணையில் நடைபெறும் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாடு தொடர் விநியோகம் மேலாண்மை திட்டத்தின்கீழ் கரூர் மாவட்டத்தில் 3 இடங்களில் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைத்தல் குறித்தும், முருங்கைக்கு அரவக்குறிச்சியிலும், வாழைக்கு கிருஷ்ணராயபுரத்திலும், வெற்றிலைக்கு புஞ்சைப்புகழூரில் அமைத்தல் குறித்தும், புதிய உழவர் சந்தை -தாந்தோணி வட்டாரம் காந்திகிராமத்தில் அமைத்தல் போன்ற செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து விவசாயிகளுக்கு பயனுள்ளதாக செயல்பட வேண்டும் என்றார். இதில் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


Next Story