வாலிபர் மாயம்


வாலிபர் மாயம்
x

வாலிபர் மாயம் ஆனார்

கரூர்

தோகைமலை அருகே உள்ள குன்னாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் விவேக் என்கிற கேசவன் (வயது 31). இவர் ஊட்டியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 27-ந்தேதி உறவினர் வீட்டு காதுகுத்து நிகழ்ச்சிக்காக சொந்த ஊர் வந்திருந்தார். மீண்டும் ஊட்டிக்கு வேலைக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அவரது பெற்றோர் கேசவனை தொடர்பு கொண்டபோது செல்ேபான் சுவிச்-ஆப் என்று வந்துள்ளது.

இதுகுறித்து அவர் பணிபுரியும் நிறுவனத்தில் விசாரித்தபோது அவர் இங்கு வரவே இல்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கேசவனின் தந்தை தங்கவேல் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, கேசவன் மாயமானது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story