அ.தி.மு.க. பொதுக்கூட்டம்


அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2022 6:45 PM GMT (Updated: 20 Sep 2022 6:46 PM GMT)

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சட்டமன்ற அ.தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முப்புடாதி அம்மன் கோவில் முன்பு நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சுப்பையா பாண்டியன், ரமேஷ், வேல்முருகன், வாசுதேவன், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தலைமை செயற்குழு உறுப்பினரும், மகளிர் அணி துணை செயலாளருமான முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் பலர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பொய்கை மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story