அ.தி.மு.க. முன்னாள் எம்.பி..ராதாகிருஷ்ணன் மரணம்


அ.தி.மு.க. முன்னாள் எம்.பி..ராதாகிருஷ்ணன் மரணம்
x

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன் மரணம் அடைந்தார்.

விருதுநகர்

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வடபட்டியை சேர்ந்தவர் டி.ராதாகிருஷ்ணன்(வயது 67). இவரது தந்தை தர்மர். தாயார் சின்னதாயம்மாள். டி.ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைந்த விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றி உள்ளார். சிவகாசி யூனியன் தலைவராக 1986 முதல் 1991-ம் ஆண்டு வரையும், 1996 முதல் 2001 வரையும், 2011 முதல் 2014 வரை என 3 முறை இருந்துள்ளார். பின்னர் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு 2 மனைவியும், 1 மகனும், 3 மகள்களும் உள்ளனர். உடல் நலக்குறைவால் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை இறந்தார். இவரது மறைவுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story