மாணவர் சேர்க்கை ஊர்வலம்


மாணவர் சேர்க்கை ஊர்வலம்
x

மாணவர் சேர்க்கை ஊர்வலம்

திருவாரூர்

குடவாசல் கிழக்கு அக்ரஹாரம் ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் குமரேசன், ஆசிரியர் பயிற்றுனர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் குடவாசல் பேரூராட்சி முழுவதும் வீதி, வீதியாக சென்று கிராமப்புற பள்ளியில் 5 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க பொதுமக்கள் முன் வர வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். மேலும் குடவாசல் கிழக்கு அக்ரஹாரம் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு வெள்ளி விளக்கு, தண்ணீர் பாட்டில், டிபன் பாக்ஸ் ஆகியவை வழங்க உள்ளோம் என கூறி வீடு, வீடாக துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story