தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x

கோப்புப்படம்

இலங்கை அரசால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்தம் உடைமைகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கை அரசால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. கச்சத்தீவு மீட்பு ஒன்றே இதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும்.

கச்சத்தீவை மீட்க தொடர்ச்சியான சட்டப் போராட்டம் நடத்திய ஒரே இயக்கம் அ.தி.மு.க. என்ற அடிப்படையில், கச்சத்தீவில் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை முழுமையாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய பா.ஜனதா கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story