வீடுகளில் குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சினால் நடவடிக்கை


வீடுகளில் குடிநீரை மின் மோட்டார் மூலம்  உறிஞ்சினால் நடவடிக்கை
x

வீடுகளில் குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். அப்போது சீனியாபுரம் போன்ற பகுதிகளில் மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சிய 7 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நகர்மன்ற அதிகாரி கூறியதாவது:-

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிநீர் வினியோகம் சரி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் யாரேனும் வீடுகளில் குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story