தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை


தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x

தொழிலாளர்களுக்கு குறைந்துபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

விருதுநகர்


தொழிலாளர்களுக்கு குறைந்துபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச ஊதியம்

இது குறித்து அவர் கூறியதாவது:-

தொழிலாளர்ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவுபடி கடந்த 4 நாட்கள் தோட்ட தொழில் மற்றும் பாதுகாவலர் தொழில் மேற்கொள்ளும் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி மேற்படி தினங்களில் பாதுகாவலர் தொழில் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது .

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு மதுரை தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் அந்த நிறுவனங்களின் மீது கேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புகார் தெரிவிக்கலாம்

மேலும் கடந்த மாதங்களில் ஆய்வு மேற்கொண்டு எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளின் படி 8 நிறுவனங்களில் பணிபுரிந்த 21 தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் ரூ. 3 லட்சத்து 88ஆயிரத்து, 628-ஐ பெற்று வழங்கப்பட்டுள்ளது .

அனைத்து நிறுவனங்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை அளிக்குமாறும் குறைவு ஊதியம் தொடர்பான புகார் தெரிவிக்க 04562 225130 என்ற விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர், அலுவலக டெலிபோனில் அலுவலக வேலை நாட்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஆய்வினை விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி முதல்சரகம், சிவகாசி 2-வது சரகம், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் உசிலம்பட்டி தொழிலாளர் உதவி ஆய்வர்கள் மேற்கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story