மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; வங்கி உதவி மேலாளர் சாவு


மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; வங்கி உதவி மேலாளர் சாவு
x

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல்; வங்கி உதவி மேலாளர் சாவு

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே உள்ள வெள்ளோடு பெரிய தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. அவருடைய மகன் ராஜேஷ் (வயது27). திருமணம் ஆகாதவர். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். ராஜேஷ் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் தனது மோட்டார்சைக்கிளில் வெள்ளோட்டு்க்கு சென்று கொண்டிருந்தார். பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சரளை அருகே சென்றபோது அவருக்கு பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து ராஜேஷ் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவக் கல்லூரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேஷ் நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த முருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story