தனியார் சொகுசு பஸ் கவிழ்ந்தது;டிரைவர் உள்பட 14 பேர் காயம்


தனியார் சொகுசு பஸ் கவிழ்ந்தது;டிரைவர் உள்பட 14 பேர் காயம்
x

தனியார் சொகுசு பஸ் கவிழ்ந்தது; டிரைவர் உள்பட 14 பேர் காயம்

ஈரோடு

பவானிசாகர்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து நேற்று முன்தினம் இரவு கர்நாடக மாநில பெங்களூருவுக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் 13 பேர் பயணம் செய்தனர். பஸ்சை பெங்களூருவை சேர்ந்த ரவி (வயது 42) என்பவர் ஓட்டி சென்றார். அந்த பஸ் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள பெரிய கள்ளிப்பட்டி வழியாக சென்று கொண்டு இருந்தது.

சத்தியமங்கலம்- ஊட்டி மெயின் ரோடு பெரிய கள்ளிப்பட்டி சோதனைச்சாவடி அருகே நள்ளிரவு 1 மணி அளவில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் திடீரென ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி டிரைவர் உள்பட 14 பேருக்கு காயம் ஏற்பட்டது.

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி பவானிசாகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே விபத்து காரணமாக சத்தியமங்கலம்- ஊட்டி மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story