வெவ்வேறு இடங்களில் சம்பவம்: ரெயில் மோதி 2 வாலிபர்கள் சாவு


வெவ்வேறு இடங்களில் சம்பவம்: ரெயில் மோதி   2 வாலிபர்கள் சாவு
x

வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் ரெயில் மோதி 2 வாலிபர்கள் இறந்தனர்.

ஈரோடு


வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் ரெயில் மோதி 2 வாலிபர்கள் இறந்தனர்.

வாலிபர் பிணம்

நாமக்கல் மாவட்டம் காவிரி ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஐந்துபனை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மகன் தமிழரசன் (வயது 27) இறந்து கிடந்ததும், தொழிலாளியான அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இறந்த தமிழரசனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொடுமுடி

இதேபோல் கொடுமுடி ரெயில் நிலைய தண்டவாளத்தில் ரெயில் மோதி வாலிபர் இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இறந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story