இளம்பெண் மாயம்
பண்ருட்டியில் இளம்பெண் மாயம்
பண்ருட்டி
பண்ருட்டி பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 42). இவரது மனைவி கஸ்தூரி(30). இவர்களுக்கு 9 வயதில் மகன் இருக்கிறான். சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இரவு அனைவரும் வீ்ட்டில் தூங்கினர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது கஸ்தூரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்த் பல்வேறு இடங்களில் தேடியும் மனைவியை காணாததால் இது குறித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire