குழந்தை திருமணம் செய்த வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை; பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு


குழந்தை திருமணம் செய்த வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை; பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு
x

குழந்தை திருமணம் செய்த வாலிபருக்கு ஒரு ஆண்டு சிறை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

பெரம்பலூர்

ஒரு ஆண்டு சிறை

பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை வடக்கு காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் லட்சுமணன்(வயது 31). இவர் ஒரு சிறுமியை குழந்தை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், பெரம்பலூர் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் போலீசாரின் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை மாவட்ட மகிளா கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்தநிலையில், பெரம்பலூர் மகிளா கோர்ட்டு நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், இந்த வழக்கில் லட்சுமணன் குற்றவாளி என்றும், அவருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தகவல் தெரிவிக்கலாம்

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் பற்றி சைல்டு லைனை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் மாவட்ட சமூக நல அலுவலரை 9944350988 என்ற செல்போன் எண்ணிலும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலரை 8668092093 என்ற செல்போன் எண்ணிலும், மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரை 9443391931 என்ற செல்போன் எண்ணிலும், குழந்தை நலக்குழுவை 6369018347 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொண்டு குழந்தை திருமணம் பற்றிய தகவல்களை தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story