கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது


கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது
x

போடி அருகே கஞ்சா செடி வளர்த்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்

தேனி

குரங்கணி மலைப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்லேனத்தேரி பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தது. பின்னர் அங்கு வளர்ந்திருந்த 10 கஞ்சா செடிகளை அழித்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் போடி வினோபாஜி காலனியை சேர்ந்த காபி தோட்ட தொழிலாளியான ராஜா என்பவர் கஞ்சா செடிகளை வளர்த்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் ராஜாவை கைது செய்தனர்.


Next Story