இருசக்கர வாகனம் மாயம்


இருசக்கர வாகனம் மாயம்
x

இரு சக்கர வாகனம் மாயமானது.

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி அருகே உள்ள எம்.ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 68). இவர் தனது இருசக்கர வாகனத்தை காளையார்குறிச்சியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது. இதை தொடர்ந்து பல இடங்களில் தேடியும் வாகனம் கிடைக்காததால் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story