இருசக்கர வாகனம் மாயம்


இருசக்கர வாகனம் மாயம்
x

விருதுநகரில் இரு சக்கர வாகனம் மாயமானது.

விருதுநகர்


விருதுநகர் பெத்தநாச்சி நகரை சேர்ந்தவர் ஊவி ராஜ் (வயது 34). இவர் விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். தனது வாடிக்கையாளரின் இருசக்கர வாகனத்தை பழுது நீக்கி கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு கடைக்குள் மற்றொரு இருசக்கர வாகனத்தில் பழுது பார்த்துக்கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்தபோது வெளியே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து ஊவிராஜ் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story