காதல் திருமணம் செய்த வாலிபர் மாயம்


காதல் திருமணம் செய்த வாலிபர் மாயம்
x

காதல் திருமணம் செய்த வாலிபர் மாயம் ஆனார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி தெய்வானைநகரை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது 32) என்பவரும் உமா மகேஸ்வரியும் (22) காதலித்து வந்தநிலையில் 4.7.2022 அன்று கோவை மருதமலையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சிவகாசிக்கு வந்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்கம் போல் வீட்டில் இருந்து கிளம்பி வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாமகேஸ்வரி தனது கணவரை பல இடங்களில் தேடி உள்ளார். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story