பொதுமக்கள் திடீர் போராட்டம்


பொதுமக்கள் திடீர் போராட்டம்
x

நெல்லை டவுனில் பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் பாட்டபத்து நபிகள் நாயகம் தெருவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காகவும், அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கவும் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாமல் கிடக்கிறது. இதேபோல் அந்த தெருவில் கழிவு நீர் ஓடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகளிலும் பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதை கண்டித்து அந்தப்பகுதி பொதுமக்கள் நேற்று அந்த பகுதியில் சாலையில் நின்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சாலை, கழிவுநீர் வசதிகளை சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.


Next Story