லாடபுரத்தில் சின்ன வெங்காய குடோன் கொட்டகை தீப்பிடித்தது


லாடபுரத்தில் சின்ன வெங்காய குடோன் கொட்டகை தீப்பிடித்தது
x

லாடபுரத்தில் சின்ன வெங்காய குடோன் கொட்டகை தீப்பிடித்து எரிந்து நாசமானது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தில் ஏற்கனவே வெவ்வேறு சமூகங்களில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட வழக்கில் 42 பேரை பெரம்பலூர் போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அந்தப்பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் லாடபுரம்-அம்மாபாளையம் செல்லும் சாலையோரத்தில் விவசாயி கனகராஜ் (வயது 46) என்பவருக்கு சொந்தமான சின்ன வெங்காய குடோன் கொட்டகை நேற்று நள்ளிரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குடோன் கொட்டகையில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் குடோன் கொட்டகை முற்றிலும் எரிந்து நாசமாயின. ஆனால் குடோனில் சின்ன வெங்காயம் உள்ளிட்ட ஏதும் இல்லை. மேலும் இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்களும் அங்கு திரண்டனர். மேலும் அவர்கள் மர்ம ஆசாமிகள் தான் சின்ன வெங்காய குடோன் கொட்டகைக்கு தீ வைத்து சென்றிருக்கலாம் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் 25-ந்தேதி ரவி என்பவருக்கு சொந்தமான சின்ன வெங்காய குடோனும், கடந்த 4-ந்தேதி நீதி என்பவரது தகர கொட்டகையும் தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story