கிணற்றில் குதித்து தூய்மை பணியாளர் தற்கொலை


கிணற்றில் குதித்து தூய்மை பணியாளர் தற்கொலை
x

குடியாத்தம் அருகே கிணற்றில் குதித்து தூய்மை பணியாளர் தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா தட்டப்பாறை அடுத்த வீரியான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், விவசாயி. இவரது மனைவி லட்சுமி (வயது 37) இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். லட்சுமி தட்டப்பாறை ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை தனது வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் லட்சுமி குதித்தார். இதனைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 45 நிமிடங்கள் போராடி கிணற்றில் இருந்து லட்சுமியை உடலை பிணமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், சரவணன் ஆகியோர் விசாரணை நடத்தினர் மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story