சிங்கம்புணரி அருகே மலைப்பாம்பு பிடிபட்டது


சிங்கம்புணரி அருகே மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 30 Dec 2022 6:45 PM GMT (Updated: 30 Dec 2022 6:46 PM GMT)

சிங்கம்புணரி அருகே மேலப்பட்டி கிராமத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே மேலப்பட்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு மலைப்பாம்பு ஒன்று எதையோ விழுங்கிய நிலையில் ஊர்ந்து செல்ல முடியாமல் கிடந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சிங்கம்புணரி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று மலைப்பாம்பை பிடித்து பிரான்மலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.இதனால் நேற்று இரவு 9 மணி அளவில் மேலப்பட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story