காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது


காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது
x

காஞ்சீபுரம் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தை அடுத்த புதூர் சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). இவர் அதே பகுதியில் வீட்டின் பின்புறம் உள்ள தகர குடோனில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு இயக்குனர் ஆபாஷ்குமார், கண்காணிப்பாளர் கீதா. துணை கண்காணிப்பாளர் நாகராஜன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 50 கிலோ எடை கொண்ட 21 மூட்டைகளில் சுமார் 1 டன் 50 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுகாவேரிப்பாக்கம் பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, வடமாநில தொழிலாளர்கள் மற்றும் சாலையோர டிபன் கடைகளுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து முருகனை கைது செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிப கழக கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story