வீட்டுக்குள் புகுந்த கண்ணாடிவிரியன் பாம்பு


வீட்டுக்குள் புகுந்த கண்ணாடிவிரியன் பாம்பு
x

வீட்டுக்குள் புகுந்த கண்ணாடிவிரியன் பாம்பு

தஞ்சாவூர்

தஞ்சை மேலஅலங்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் டீக்கடையில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். நேற்று இரவு ரமேஷ் தனது வீட்டில் வழக்கம்போல தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 4 மணி அளவில் அவரின் மீது கண்ணாடிவிரியன் பாம்பு ஊர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் திடுக்கிட்டு எழுந்த ரமேஷ் வெளியே ஓடி வந்து பாம்பு, பாம்பு என சத்தம் போட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் வீட்டுக்குள் பதுங்கி இருந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சென்றனர். தகவல் கிடைந்த சில மணி நேரங்களிலே வந்து பாம்பை பிடித்து சென்ற தீயணைப்புபடை வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.


Related Tags :
Next Story