கோவில்பட்டியில் வியாபாரியை காரில் கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் கைது


கோவில்பட்டியில் வியாபாரியை காரில் கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் கைது
x

கோவில்பட்டியில் உள்ள பாத்திரக் கடைக்கு வந்த டிப் டாப் ஆசாமிகள், தங்களை போலீசார் எனக்கூறி, கடை உரிமையாளரை காரில் கடத்தியுள்ளது.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில் உள்ள பாத்திரக் கடைக்கு வந்த டிப் டாப் ஆசாமிகள், தங்களை போலீசார் எனக்கூறி, கடை உரிமையாளர் தங்கம் என்பவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்தியுள்ளது.

கோவில்பட்டி தாண்டி விருதுநகர் சென்றதும், 5 லட்சம் ரூபாய் தந்தால் விட்டுவிடுவோம் என அக்கும்பல் கூறியுள்ளது. அதற்கு சம்மதித்த தங்கம், தனது மகனை தொடர்கொண்டு பணம் எடுத்து வர சொல்லியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அக்கும்பல், அங்கிருந்து காரில் வேகமாக தப்பிச் சென்றது.

இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காரின் அடையாளத்தை வைத்தும், சுங்கச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபடியும், போலீசார் காரை பின் தொடர்ந்தனர்.

அரவக்குறிச்சி வேளஞ்செட்டியூர் சுங்கச்சாவடியில் வந்த காரை போலீசார் தடுக்க முயன்றபோது, நிற்காமல் வேகமாக சென்றது. சினிமா பாணியில் அதனை பின்தொடர்ந்து சென்ற போலீசார், வெள்ளியணை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தி காரை சுற்றி வளைத்தனர். பின்னர் அதிலிருந்த 5 பேரை கைது செய்த போலீசார், 5 லட்சம் ரூபாய் பணத்தையும் மீட்டனர்.


Next Story