வயலில் மின்வேலி அமைத்த விவசாயி பலி


வயலில் மின்வேலி அமைத்த விவசாயி பலி
x

வயலில் மின்வேலி அமைத்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

மின்வேலியில் சிக்கி சாவு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் என்ற பச்சமுத்து(வயது 51). விவசாயி. இவர் தனது வயலில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார்.

இந்நிலையில் வயலில் காட்டுப்பன்றி தொல்லையை கட்டுப்படுத்த, நேற்று முன்தினம் வயலில் கம்பி வேலி அமைத்து அதில் மின்சாரம் பாய்ச்சியுள்ளார். பின்னர் பச்சமுத்து வயலின் மற்றொரு பகுதிக்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வி.களத்தூர் போலீசார், பச்சமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டுப்பன்றியை கட்டுப்படுத்த விவசாயி அமைத்த மின்வேலியில் அவரே சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story