சாராயம் கடத்திய சிறுவன் கைது


சாராயம் கடத்திய சிறுவன் கைது
x
தினத்தந்தி 11 April 2023 6:45 PM GMT (Updated: 11 April 2023 6:46 PM GMT)

நாகூரில் சாராயம் கடத்திய சிறுவன் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகூர்-நரிமணம் சாலையில் நேற்று மாலை தனிப்படை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவனை நிறுத்தி அவர் வைத்திருந்த மூட்டையை சோதனை செய்தனர். அதில் சாராயம் இருந்தது தெரிய வந்்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story