சாராயம் கடத்திய சிறுவன் கைது


சாராயம் கடத்திய சிறுவன் கைது
x
தினத்தந்தி 3 March 2023 6:45 PM GMT (Updated: 3 March 2023 6:46 PM GMT)

கீழ்வேளூர் அருகே சாராயம் கடத்திய சிறுவன் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே வடகரை ஊராட்சி வங்காரமாவடி கிராமத்தில் கீழ்வேளூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வங்காரமாவடி வெட்டாறு பாலம் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் 18 வயது சிறுவன் என்பதும், அவர் காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்து, அவனிடம் இருந்து 110 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.


Next Story