மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
x

மூதாட்டியிடம் 4 பவுன் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்டது.

கரூர்

கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர். இவரது மனைவி காமாட்சி (வயது 85). இவர் தனது வீட்டின் முன்புறமுள்ள வாசலை பெருக்குவதற்காக அதிகாலையில் வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக கருப்பு பேண்ட், வெள்ளை டி-சர்ட் அணிந்து வந்த 23 வயது வாலிபர் ஒருவர், காமாட்சி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து காமாட்சியின் மகன் மணிவேல் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிந்து, மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்.


Next Story