அதிகரிக்கும் தொற்றுப்பாதிப்பு: தமிழ்நாட்டில் 83 பேருக்கு கொரோனா


அதிகரிக்கும் தொற்றுப்பாதிப்பு: தமிழ்நாட்டில் 83 பேருக்கு கொரோனா
x

சென்னை,

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 83 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 43 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக கோவையில் 18 பேருக்கும், சென்னையில் 16 பேருக்கும், செங்கல்பட்டில் 10 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணி ஒருவர் உள்பட மொத்தம் 22 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயத்தில் 16 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல தமிழகத்தில் கடந்த சில நாட்களை போன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.


Related Tags :
Next Story