குரூப்-1 தேர்வை 8,097 பேர் எழுதினர்


குரூப்-1 தேர்வை 8,097 பேர் எழுதினர்
x

குரூப்-1 தேர்வை 8,097 பேர் எழுதினர்.

திருச்சி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்டத்தில் 44 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதையொட்டி தேர்வு எழுத வந்தவர்களுக்கு முதலில் சுகாதார பணியாளர்கள் உடல் வெப்பநிலைைய தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு பரிசோதித்தனர். தேர்வு எழுத வந்தவர்களை தேர்வு அறைக்குள் காலை 9 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர். அதற்கு மேல் வந்தவர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்கவில்லை. மேலும் ஹால் டிக்கெட், ஏதாவது ஒரு அடையாள அட்டை வைத்திருந்த தேர்வாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். காலை 9.30 மணியளவில் தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது. இதில் பொது படிப்பிற்கு 150 கேள்விகளும், திறன் மற்றும் மனத்திறன் தொடர்பாக 50 கேள்விகளும் என மொத்தம் 200 கொள்குறி வகை கேள்விகள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது. மாவட்டத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 13,613 பேரில், 8,097 பேர் வந்து தேர்வு எழுதினர். 5,516 பேர் தேர்வு எழுத வரவில்லை. திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தந்தை பெரியார் அரசு கல்லூரியில் தேர்வு நடந்த மையத்தை கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் மாவட்ட பகுதிகளில் தேர்வை கண்காணிக்க சப்-கலெக்டர் நிலையில் பறக்கும் படை அலுவலர்களும், இயங்கு குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட ஆய்வு அலுவலர்களும் அந்த பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் போலீசாரும், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ஈடுபட்டனர்.


Next Story