நாய்கள் கடித்து 8 ஆடுகள் சாவு


நாய்கள் கடித்து 8 ஆடுகள் சாவு
x

நாய்கள் கடித்து 8 ஆடுகள் பரிதாபமாக இறந்தது.

கரூர்

தென்னிலை அருகே கூனம்பட்டியில் வசிப்பவர் முத்துசாமி. இவர் 60 ஆடுகளை வைத்து பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு ஆடுகளை அடைத்துவிட்டு மறுநாள் காலை பார்த்தபோது 10 ஆடுகளை நாய்கள் கடித்து இருந்தது தெரியவந்தது. இதில் 8 ஆடுகள் இறந்து விட்டது.

2 ஆடுகள் காயம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடை உதவி டாக்டர் இளமுருகு தலைமையிலான மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த 2 ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். தென்னிலை பகுதிகளில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story