திருட்டுப்போன ரூ.7 லட்சம் மதிப்பிலான 71 செல்போன்கள் மீட்பு


திருட்டுப்போன ரூ.7 லட்சம் மதிப்பிலான 71 செல்போன்கள் மீட்பு
x

திருவாரூர் மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.7 லட்சம் மதிப்பிலான 71 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஒப்படைத்தார்.

திருவாரூர்


திருவாரூர் மாவட்டத்தில் திருட்டுப்போன ரூ.7 லட்சம் மதிப்பிலான 71 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஒப்படைத்தார்.

ரூ.7 லட்சம் செல்போன்கள் மீட்பு

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டுப்போன செல்போன்களை கண்டுபிடித்து தர அதன் உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பல்வேறு வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதில் போலீசாரின் துரித நடவடிக்கையால் திருட்டு மற்றும் காணாமல் போன ரூ.7 லட்சம் மதிப்பிலான 71 செல்போன்கள் மீட்கப்பட்டது.

உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மீட்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமை தாங்கி ரூ.7 லட்சம் மதிப்பிலான 71 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்கள் தங்கள் உடைமைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு எந்தநேரத்திலும் உதவுவதற்கு போலீஸ் தயாராக உள்ளது என்றார்.


Related Tags :
Next Story