தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
x

தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சாத்தூரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 30). தொழிலாளி. இவருடைய மனைவி ராமலட்சுமி. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக ராமலட்சுமி தனது அக்கா வீட்டிற்கு சென்று விட்டார். சம்பவத்தன்று அங்கு வந்த கனகராஜ் தனது மனைவியுடன் தகராறு செய்து அடித்து உதைத்தார். அப்போது ராமலட்சுமி வீட்டை பூட்டி கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ் வீட்டின் கதவுக்கு தீ வைத்துள்ளார். இதுகுறித்து ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அம்மாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை ைகது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து கனகராஜீக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Related Tags :
Next Story