தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
x

தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 35).. இவர் கொசு மருந்து அடிக்கும் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இவர் கொசு மருந்து அடிக்க சென்ற போது ஒரு வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து தொழிலாளி காளிராஜுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்தார்.


Related Tags :
Next Story