தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சிவகிரி பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 53). கூலி தொழிலாளியான இவர் ராஜபாளையத்தை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருசாமியை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி குருசாமிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story