வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 7 லட்சம் மோசடி - டெல்லியைச் சேர்ந்த 2 பேர் கைது


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 7 லட்சம் மோசடி - டெல்லியைச் சேர்ந்த 2 பேர் கைது
x

கைது செய்யப்பட்ட ரூப்சந்த்,நவீன்குமார்  

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 7 லட்சம் மோசடி செய்த டெல்லியைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், லட்சுமி நகரைச்சார்ந்த சக்திநாதன். இவர் ஆன்லைனில் வேலைக்காக பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ஆன்லைனில் இருந்த முகவரியை வைத்து சக்திநாதனிடம் போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக சொல்லி போலியான அப்பாயின்மென்ட் ஆர்டர் தயார் செய்து மின்அஞ்சல் மூலம் அனுப்பி மர்ம நபர்கள் அவரை நம்பவைத்து, 7 லட்சத்து 14 ஆயிரத்து 35 ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக செங்கல்பட்டு மாவட்ட சைபர் க்ரைம் போலிஸ் நிலையத்தில் சத்திநாதன் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு சுகுனாசிங் உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் போலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் போலிஸ் சூப்பிரண்டு பொன்ராமு மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் உள்ளிட்ட போலிசார் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட புதுடெல்லியைச் சேர்ந்த நவின்குமார் (வயது 24), ரூப்சந்த் (31) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரையும் மதுராந்தகம் கோர்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.


Next Story