சென்டிரல் ரெயில் நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்


சென்டிரல் ரெயில் நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்
x

சென்டிரல் ரெயில் நிலையத்தில் 6 கிலோ கஞ்சாவை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரோகித்குமார் தலைைமயிலான ரெயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒடிசாவில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்திறங்கிய ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் மாவட்டத்தை சேர்ந்த ஷம்புநாத் மாலிக் (வயது 45) என்பவரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 6 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதையடுத்து கஞ்சாவையும், அவரையும் போதை பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.


Next Story