கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு


கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு
x

ராமேசுவரத்தில் இருந்து நேற்று விசைப்படகுகளில் சுமார் 500 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று விசைப்படகுகளில் சுமார் 500 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர்.

கச்சத்தீவுக்கும் கோடியகரைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த ஒரு படகு மற்றும் 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 6 மீனவர்கள் ராமேசுவரத்தை சேர்ந்தவர்களா அல்லது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்களா என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.


Next Story