லாரி டியூப்களில் பதுக்கி வைத்திருந்த 500 லிட்டர் சாராயம் பறிமுதல்
லாரி டியூப்களில் பதுக்கி வைத்திருந்த 500 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்
வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அணைக்கட்டு மூலைக்கேட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் அவர் மேல்வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி (வயது 45) என்பதும், 17 லாரி டியூப்களில் சுமார் 500 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் ஏற்கனவே தேடப்பட்டு வந்த பழைய குற்றவாளி என்பதும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறினர்.
Related Tags :
Next Story