கீழமணக்குடி பகுதியில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


கீழமணக்குடி பகுதியில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

கீழமணக்குடி பகுதியில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே கீழமணக்குடி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று மாலையில் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி அனில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரும், தனி வருவாய் ஆய்வாளர் நிவாஸ்கர் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு மறைவான பகுதியில் சுமார் 5 பிளாஸ்டிக் பைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நாகர்கோவில் கோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர்.


Next Story