தொழிலதிபர் வீட்டில் 50 பவுன் நகை, சொத்து ஆவணங்கள் கொள்ளை


தொழிலதிபர் வீட்டில் 50 பவுன் நகை, சொத்து ஆவணங்கள் கொள்ளை
x

ராஜபாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் 50 பவுன் நகை, சொத்து ஆவணங்கள் கொள்ளைபோனது.

விருதுநகர்

ராஜபாளையம்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம்பட்டி கம்பர் தெருவை சேர்ந்தவர் பாலகுமரன் (வயது 29). விசைத்தறிக்கூடம் நடத்தி வரும் இவர் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இவர் அவரது தாயாருடன் வசித்து வருகிறார். இவரது பீரோவில் இருந்த 50 பவுன் நகை, ரூ.50 ஆயிரம், பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரம் ஆகியவற்றை காணவில்லை.

இதுகுறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இதுகுறித்து ராஜபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து நீதிபதி அளித்த உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Related Tags :
Next Story