தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
சேலம் வீராணம் அருகே துளசிமணியூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரின் போலீசார் விசாரணை நடத்தி சுப்பிரமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சுப்பிரமணிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire