முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை
7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
7-ம் வகுப்பு மாணவி
தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு அடுத்த புலவன் காடு கீழத்தெருவை சேர்ந்தவர் சுப்பையன் (வயது 69). விவசாயி. இவர் கடந்த ஆண்டு 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவியின் தாய் சென்று கேட்டபோது அவரையும் சுப்பையன் தாக்கி உள்ளார். இது குறித்து மாணவியின் தாய் பாப்பாநாடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து சுப்பையனை கைது செய்து விசாரணை நடத்தினார்.
5 ஆண்டுகள் சிறை
இது தொடர்பான வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரித்து, சுப்பையனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார்.