சாராயம் விற்ற 5 பேர் கைது


சாராயம் விற்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2022 6:45 PM GMT (Updated: 18 Oct 2022 6:46 PM GMT)

சாராயம் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி


மூங்கில்துறைப்பட்டு,

சங்கராபுரம் அருகே உள்ள வடபொன்பரப்பி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கம், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், மியாட்மனோ மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தனது வீட்டுக்கு பின்னால் வைத்து சாராயம் விற்ற தொழுவந்தாங்கலை சேர்ந்த சாது (வயது 29) என்பவரை கைது செய்தனர். இதேபோன்று, தங்களது வீடுகளுக்கு பின்னால் வைத்து சாராயம் விற்றதாக ரங்கப்பனூரை சேர்ந்த ராஜேந்திரன் (55), மல்லாபுரம் முத்துராமன் (45), புளியங்கோட்டை பழனியம்மாள் (45), புதுப்பேட்டை தனபாக்கியம் (70) ஆகியோரை கைது செய்தனர்.


Next Story